
குளச்சல் அருகே இரும்பிலிக்கரை பகுதியில் 70-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் சரியாக சாலை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. மழை காலங்களில் குளக்கரையை கடந்து செல்ல சாலை வசதி இல்லாததால் ஒற்றையடி பாதையில் அப்பகுதி மக்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். இதனால், அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குழந்தைகள், முதியோருக்கு மருத்துவ உதவிக்கு அவசரமாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.