தார்சாலை வேண்டும்

Update: 2025-06-08 07:33 GMT

சூலூர் அருகே கலங்கல் பகுதி மாருதி ஹவுசிங் யூனிட் பகுதியில் தார்சாலை வசதி இல்லை. இதனால் மழை பெய்தால் அங்குள்ள மண் சாலை சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இதன் காரணமாக அங்கு வசித்து வரும் பொதுமக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். நடந்து செல்லும் முதியவர்கள், சிறுவர்கள் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். வாகனங்களில் சென்றாலும் டயர் மண்ணில் புைதந்து விடுகிறது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, அந்த பகுதியில் தார்சாலை அமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்