பர்கூர் தாலுகா வரட்டனப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகில் காட்டூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் லேசான மழை பெய்தால் கூட சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக மழை காலங்களில் நடந்து செல்லவோ, மோட்டார் சைக்கிளில் செல்லவோ இயலாத நிலை உள்ளது. மேலும் சாலை முழுவதும் பெயர்ந்து மணல் நிரப்பப்பட்டு காட்சியளிக்கிறது. எனவே தாமதம் இன்றி இந்த சாலையை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-மாதையன், பர்கூர்.