எச்சரிக்கை பலகை வைக்க கோரிக்கை

Update: 2025-06-01 13:21 GMT

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே உள்ள மாந்தாங்குடியிலிருந்து அரியூர் வழியாக பொக்கிஷக்காரன்பட்டி, வைத்தூர், புத்தாம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. நெடுஞ்சாலைத்துறையின் கீழ் உள்ள இந்த சாலையில் 2 இடங்களில் எஸ் வடிவிலான வளைவு கொண்ட சாலையாக உள்ளது. இந்த இடத்தில் எச்சரிக்கை பலகை வைக்கப்படாமல் உள்ளதால் இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் வேகமாக திரும்பும்போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்