திருவள்ளூர் மாவட்டம், மாங்காடு, நெல்லிதோப்பு வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை பல வருடங்களாக குண்டும் குழியுமாக இருந்தது. இதை சரிசெய்ய சில மாதங்களுக்கு முன்பு ஜல்லிகளை சாலையில் கொட்டினார்கள். ஆனால் இப்போதுவரை எந்த வேலையும் நடைபெறவில்லை. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே, நகராட்சி அதிகாரிகள் சாலையை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.