அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி செல்லும் சாலையில் சின்ன நாகலூர் பிரிவு சாலைக்கு கிழக்கு புறத்தில் உள்ள பாலக்கரை குறுகிய பாலத்தின் வழியாக அனைத்து சிமெண்டு ஆலைகளுக்கு சுண்ணாம்பு கல் ஏற்றி செல்லும் லாரிகள் மற்றும் இதர கனரக வாகனங்கள் தினமும் முழு நேரமும் சென்று வருகிறது. இந்த வாகனங்கள் இவ்வழியே செல்வதால் பாலத்தின் இருபுறமும் அதிகளவில் மண்கள் தேங்கி மேடாக உள்ளது. தற்சமயம் காற்று அதிகம் வீசுவதனால் மண்கள் காற்றில் பறந்து அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.