குண்டும், குழியுமான சாலை

Update: 2025-06-01 11:48 GMT

அரியலூர் மாவட்டம், புதுப்பாளையம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து சுற்றுவட்டார ஊர்களுக்கு வேலை நிமித்தமாகவும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்காகவும் ஏராளமான மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் அரியலூர் உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், புதுப்பாளையம்-அரியலூர் சாலை மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அவசர நேரத்தில் ஆம்புலன்ஸ் செல்வதற்கு கூட வேகமாக செல்ல முடியாக அளவில் உள்ள இந்த சாலையால் பொதுமக்களுக்கும், மாணவ-மாணவிகளும் நேர விரயம் ஏற்படுகிறது. அதேபோல் வாகனங்களில் அடிக்கடி பழுதும் ஏற்படுகிறது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு சாலையை சீரமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்