அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் முதல் சூரப்பள்ளம், விளந்தை, தென்னூர் வழியாக செல்லும் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் குண்டும், குழியுமாக காணப்பட்டது. இந்நிலையில் இந்த சாலையை புதிய தார் சாலையாக மாற்றி அமைக்கும் வகையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பழைய தார்சாலை முழுவதும் பெயர்க்கப்பட்டு, தற்போது ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு உள்ளது. ஆனால் பணிகள் நிறைவுபெறாமல் கடந்த 6 மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.