விபத்தை ஏற்படுத்தும் பள்ளம்

Update: 2025-06-01 11:39 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தெக்கூர் நெடுஞ்சாலையில் குடிநீர் குழாய் பராமரிப்பு பணிக்காக சாலையில் பள்ளம் தோண்டும் பணி நடந்து வருகிறது. இதனால் வாகனஓட்டிகள் சாாலையில் சிரமத்துடன் பயணிக்கும் சூழல் நிலவுகிறது. மேலும் சாலையில் பள்ளம் இருப்பதாக அறிவிப்பு பலகை ஏதும் வைக்கப்படாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குடிநீர் குழாய் பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்கவும், அறிவிப்பு பலகை வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்