கூடலூரில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள சாலைகள் பல இடங்களில் குண்டும், குழியுமாக மாறிவிட்டன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். சில நேரங்களில் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. இதுபோன்று கேரளாவுக்கு செல்லும் சாலைகளும் பழுதடைந்து காணப்படுகின்றன. எனவே மழையால் சேதமான சாலைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.