சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2025-06-01 07:42 GMT

அரசூர் திருமலை நகர் பகுதியில் உள்ள சாலை பழுதடைந்து மிகவும் மோசமாக காணப்படுகிறது. மழைக்காலத்தில் சாலையில் உள்ள பள்ளத்தில் தேங்கும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு செல்கிறார்கள். கால்வாய் வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து கழிவுநீரை குழாய் அமைத்து வெளியேற்றி வந்தனர். ஆனால் வாகனங்களால் குழாய் உடைந்து சாலை முழுவதும் கழிவுநீர் ஆறு போல் செல்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்புள்ளது. சாலையை சீரமைக்கவும், சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்தி தரவும் அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்