கோபியில் இருந்து சத்தி செல்லும் சாலையில் கோவை பிரிவு பஸ் நிறுத்தம் அருகே சாக்கடை கால்வாய் அமைப்பதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆழமாக குழி தோண்டப்பட்டது. ஆனால் இன்னும் கால்வாய் அமைக்கப்படவில்லை. அந்த வழியாக இரவு நேரத்தில் வரும் வாகன ஓட்டிகள் தவறி இந்த குழிக்குள் விழுந்து காயம் அடைய வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு ஆபத்தான நிலையில் காணப்படும் இந்த குழியை மூட அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.