மணக்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஒய்.எம்.சி.ஏ. காலனிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை பல ஆண்டுகளாக ஜல்லிகள் பெயர்ந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள், பெண்கள், குழந்தைகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பாதசாரிகள், வாகன ஓட்டிகள் நலன்கருதி சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.