மதுரை கங்கா நகர் பகுதியில் உள்ள சாலை மிகவும் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றது.இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமமடைகின்றனர். எனவே இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் சாலையை விரைந்து சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.