கூடலூர் மரப்பாலத்தில் இருந்து மங்குலி செல்வதற்கு சாலை உள்ளது. இதில் சாலையோரத்தின் இருபுறமும் ஆபத்தான பள்ளங்கள் உள்ளது. இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாமல் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் ஆபத்தான பள்ளங்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.