தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் பழவத்தான்கட்டளை கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் விவேகானந்த நகர் உள்ளது. இந்த பகுதியில் உள்ள சாலை முறையான பராமரிப்பின்றி குண்டும்,குழியுமாக இருக்கிறது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உருவாகிறது. வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
