சாலையில் திடீர் பள்ளம்

Update: 2025-05-11 11:08 GMT

கோவையை அடுத்த நீலாம்பூர் பஸ் நிறுத்தம் அருகே அவினாசி சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் அந்த பள்ளத்தில் இறங்கி ஏறும்போது நிலைதடுமாறி சாலையில் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். அதுவும், இரவில் விபத்துகள் அதிகரித்து வருகிறது. எனவே பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறும் முன்பாக, அந்த சாலையில் ஏற்பட்டு உள்ள பள்ளத்தை உடனடியாக சரி செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது