விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் சாலை முற்றிலுமாக சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர். மேலும் இந்த சாலையால் வாகனங்கள் அதிகளவில் பழுதடைவதோடு சிறு,சிறு விபத்துகளும் நடக்கின்றது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.