தட்டார்மடம் அருகே அரசூர் பூச்சிக்காடு கிராமத்தில் நெடுஞ்சாலையில் இருந்து ஊருக்குள் செல்லும் ரோடு முழுவதும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துடன் பயணிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.