சாலையில் ஏற்பட்ட குழியால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2025-04-27 09:30 GMT

வெள்ளக்கோவில் முத்தூர் சாலை திருவள்ளுவர் நகர் அருகே தார் சாலை சேதம் அடைந்து குழி ஏற்பட்டுள்ளது. வேகமாக வரும் வாகனங்கள் இந்த குழியில் இறங்கி சேதமடைந்து வருகின்றன. இரவு நேரங்களில் குழியிருப்பது அறவே தெரிவதில்லை. வாகனங்களை திடீரென நிறுத்துவதால் பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்துகளும் ஏற்படுகின்றன இருசக்கர வாகனங்களில் செல்லும் பலர் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். பெரிய அசம்பாவிதம் ஏதும் ஏற்பட முன் இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.


மேலும் செய்திகள்

சாலை பழுது