ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து திருநகர் காலனி, கிருஷ்ணம்பாளையம் செல்லும் சாலையில் பல இடங்களில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். இதன் காரணமாக இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?