சாலை வசதி வேண்டும்

Update: 2025-04-20 10:41 GMT

நாகை மாவட்டம் வேதாரண்யம் கத்தரிப்புலம் கோவில்குத்தகை வடக்கு பகுதியில் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் மண்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் மண்பாதை சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. இதன்காரணமாக மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், வாகனங்களும் சேற்றில் சிக்கிக்கொள்கின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது