மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே தெற்கு மாரட் வீதியில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் சாலையில் ராட்சத பள்ளங்களில் சிலர் விழுந்து காயமடைகினறனர். எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.