மதுரை செல்லூர் தாகூர் நகர் பகுதிகளில் குழாய் பதிப்பதற்காக ஆங்காங்கே முக்கிய சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. ஆனால் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் சாலையை பயன்படுத்து மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் பள்ளங்களில் சிலர் விழுந்து காயமடைகின்றனர். எனவே பணிகளை துரிதப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.