குற்றாலம் வடக்கு சன்னதி தெரு, சன்னதி பஜார், பராசக்தி கல்லூரி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், மாணவிகள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலைகளை உடனே சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.