பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் கிராமத்தில் தெற்கு தெருவில் ஏராளாமான பொதுமக்கள் வசித்துள்ளனர். இங்கு சந்திப்பு சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக இரவு நேரங்களில் நடந்து செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும், பொதுமக்கள் நடந்து செல்லவே முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.