ரீத்தாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட குறுப்பன்விளை மற்றும் ஈத்தம்பாடு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக தார்ச்சாலை என்பதற்கான அடையாளமே தெரியாத வகையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பாதசாரிகள் நலன்கருதி சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.