புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா ஆத்தங்கரைவிடுதி கிராமத்தில் இருந்து புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை செல்லும் மெயின் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் தற்போது சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதானல் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.