தேனி அரண்மனைப்புதூா் ஊராட்சி 9-வது வார்டில் உள்ள சிமெண்டு சாலை பெயர்ந்து மேடு, பள்ளமாக மாறியுள்ளது. இதனால் மழைக்காலத்தில் அங்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக இரவு நேரங்களில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் சாலை சேதமடைந்து இருப்பது தெரியாமல் தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். எனவே சேதமடைந்த சிமெண்டு சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.