அரூர் பஸ் நிலையத்தில் சமீப காலமாக விபத்துகள் அதிகமாக நடக்கின்றன. இதற்கு காரணம் பஸ் நிலையத்திற்குள் வரும் பஸ்கள் வேகமாக வருவதாகும். மேலும் இந்த ஆண்டில் இதுவரை 5-க்கும் மேற்பட்ட விபத்துகள் இந்த பகுதியில் நடந்துள்ளன. எனவே விபத்துகளை தடுக்க பஸ் நிலைய நுழைவு வாயில் பகுதியில் வேகத்தடைகள் அமைத்து வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும்.
-சாமிநாதன், அரூர்.