விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரத்திலிருந்து பஞ்சம்பட்டி செல்லும் சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர். மேலும் இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு சேதமடைந்த சாலையை சீரமைத்து தர வேண்டும்.