மதுரை நகர் பொதும்பு பகுதி அதலை கிராமம் அன்னை நகர் பஸ் நிறுத்தம் பகுதி சாலையில் இரண்டு இடங்களில் குழிகள் உள்ளன. சாலையும் ஆங்காங்கே குண்டும்-குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியே கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். கனரக வாகனங்கள் கடக்கும் போது டயர்கள் தேய்மானம் அடைந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சாலையில் உள்ள குழிகளை சீரமைக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?