பெரம்பலூர் மாவட்டம் பென்னகோணம் கிராமத்தில் இருந்து பெருமாத்தூர் கிராமத்திற்கு செல்லும் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் வாகனங்களின் டயர்கள் அடிக்கடி பஞ்சர் ஆகிய வருவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.