மதுரை மாவட்டம் சோழவந்தான் தென்கரை இனைப்பு பாலத்தில் உள்ள சாலை ஆங்காங்கே பெயர்ந்து அதிகளவில் பள்ளங்கள் மற்றும் விரிசல்கள் காணப்படுகின்றன. இதனால் இப்பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர். மேலும் இதனால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வாகன ஓட்டிகள் நலன் கருதி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.