தடுப்புகளை அகற்ற வேண்டும்

Update: 2025-03-09 18:05 GMT

அந்தியூர் அருகே உள்ள புதுமேட்டூர் பகுதியில் விபத்துகளை தடுக்க தடுப்புகள் வைக்கப்பட்டது. இதனால் எதிரெதிரே வரும் வாகனங்கள் நின்று செல்லாமல் ஒன்றையொன்று முண்டியடித்து தடுப்புகளை இடித்துக்கொண்டு சென்று வந்தன. இதனால் சில வாரத்துக்கு முன்பு சாலையின் இருபுறமும் வேகத்தடை அமைக்கப்பட்டது. ஆனால் தடுப்புகள் மட்டும் அகற்றப்படாமல் இருந்துவருகிறது. இதனால் எதிரேதிரே வரும் வாகனங்கள் ஒதுங்கி செல்ல வழி இல்லாமல் ஒன்றன்பின் ஒன்றாக நின்று செல்கின்றன. இதனால் சாலையை கடப்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே தடுப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்