சங்கராபுரம் அருகே பாண்டலம் ஏரிக்கரை சாலை பலத்த சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. கற்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் சாலை உள்ளதால் இதன் வழியாக செல்லும் பள்ளி, கல்லூாி மாணவ, மாணவிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சாலையை சீரமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.