கடலூர் துறைமுகம் மணவெளி- மதிமீனாட்சி நகர் செல்லும் சாலையில் பருவமழையால் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக இரவு நேரத்தில் சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?