விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் பகுதியில் சாலை சேதம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் காலை நேரங்களில் பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைகின்றனர். மேலும் இந்த சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகனங்கள் அவ்வப்போது பழுதாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சேதம் அடைந்த இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?