சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சில சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழும் அபாயமும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.