பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளம்- ஆலத்தூர்கேட் சாலையில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வேகத்தடையில் வெள்ளை வர்ண கோடுகள் பூசப்படாமல் உள்ளதால் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த வேகத்தடையில் மோதி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும் நான்கு சக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வேகத்தடையில் வெள்ளை வர்ண கோடுகள் பூச வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.