மதுரை செல்லூர் தாகூர் நகர் கீழகைலாசபுரம் பகுதியில் சாலைகள் சேதமடைந்த நிலையில் மிகவும் மோசமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் ,பாதசாரிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர்.மேலும் இதனால் வாகன ஓட்டிகள் அவ்வப்போது கீழே விழுந்து விபத்தை சந்தித்து வருகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?