பழனி சண்முகபுரத்தில் ரெட்கிராஸ் ரோடு, திருவள்ளுவர் ரோடு சந்திப்பு பகுதியில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே அந்த சாலையில் வேகத்தடை அமைக்க நகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.