திருவட்டார் ஊராட்சிக்கு உட்பட்ட தெற்றியோடு பகுதியில் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. அதன்பிறகு பணிகள் தொடர்ந்து நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதிக்கு பஸ்கள் செல்வதில்லை. இதனால், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். எனவே, மாணவ-மாணவிகள் நலன்கருதி மழைநீர் வடிகால் ஓடைப்பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரமேஷ் , தோட்டியோடு.