விருதுநகர் மாவட்டம் சிவகாசி, திருத்தங்கல் பகுதிகளில் உள்ள சாலைகள் முற்றிலுமாக சேதமடைந்த நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், அன்றாட பணிக்கு செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். மேலும் இதனால் சிலர் விபத்துகளிலும் சிக்குகின்றனர். எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.