ஈரோடு முனிசிபல் காலனி சக்தி விநாயகர் கோவில் எதிரே உள்ள மேட்டூர் ரோட்டில் பல நாட்களாக பள்ளம் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி சென்று வருகின்றனர். முதியவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.