குற்றாலம் சன்னதி பஜார், வடக்கு சன்னதி பஜாரில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டி குழாய் பதித்தனர். பின்னர் சாலையை சீரமைக்காததால் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வியாபாரிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.