சிதம்பரம் வாகீச நகர் மற்றும் நான்கு முக்கிய வீதிகளில் குடிநீர் இணைப்பு கொடுப்பதற்காக அதிகாரிகள் சாலையோரத்தில் பள்ளம் தோண்டினர். அந்த பணி முடிந்ததும் பள்ளத்தை சரியாக மூடாமல் அதிகாரிகள் விட்டுவிட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் அந்த பள்ளத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் பள்ளத்தை மூட சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.