வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2025-01-26 16:18 GMT

அந்தியூர் அருகே சத்தி ரோட்டில் உள்ள சின்னதம்பிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட புதுமேட்டூர் பஸ் நிறுத்தம் வழியாக வாகனங்கள் வேகமாக சென்று வந்தன. இதனால் ஏற்பட்ட விபத்துகளை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டன. எனினும் எதிரேதிர் வரும் வாகனங்கள் நின்று செல்லாமல் ஒன்றையொன்று முண்டியத்துக்கொண்டும், தடுப்புகள் மீது இடித்துக்கொண்டும் சென்று வருகின்றன. இதன் காரணமாக தொடர்ந்து விபத்துகள் நடக்கின்றன. இதனால் பஸ் நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கவும் சிரமமாக உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண சாலையை அகலப்படுத்தி வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்