மல்லிப்பட்டினம் ஊராட்சி வாஹீது தெருவில் சாலை வசதி இல்லை. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மண்பாதையாக இருப்பதால் மழைக்காலங்களில் பாதை சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் சேற்றில் சிக்கிக்கொள்கின்றன. இதன்காரணமாக வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாஹீது தெருவில் சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.