விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2025-01-12 16:24 GMT

மதுரை பைபாஸ் ரோடு துரைசாமி நகர் மற்றும் ராம்நகர் பொற்குடம் அபார்ட்மெண்ட் சந்திப்பில் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் அப்பகுதியில் சாலையை கடக்க முடியாமல் முதியோர்கள், கர்ப்பிணிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் மிகவும் அச்சமடைகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றது. எனவே இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்